14.10.11

காதல்


காதல் என்றால் என்ன?

அதை பற்றி சொல்ல எனக்கு அனுபவம் பத்தாது (ஏனெனில் இப்போது தான் என்னவளை சந்தித்துள்ளேன்!!!). நமக்கு எதையுமே பிறர் விளங்க சொல்லி கேட்பதே வழக்கம்.இந்த முறை அந்த வாய்ப்பை தட்டி செல்பவர் வ.வெ.சு.ஜயர்.(போதும் பேத்தல், கேட்கிறது). இப்பொழுது சமத்தாக , காதல் பாடம் கேளுங்கள்

கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளையெல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும்போது, மற்ற யாரைப் பார்க்கும்போது அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமானிய விஷையமானாலும், அவருடைய குரலில் வீசேஷமான இனிமை இராவிட்டாலும், அவருடைய வார்த்தயைக் காது தேவாமிரிதத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரடத்தில் பேசும்போது வாய் குளருகிறது.; நாக்குக் கெஞ்சுகிறது; இதெல்லாம் காதலின் அடையாளம். ஆனால் இக் காதல் எப்படிப் பிறக்கிறது என்றாலோ, அது தேவ ரகசியம் மனிதரால் சொல்ல முடியாது!!!

உங்களுக்கும் இது போல காதலின் அடையாளம் அல்லது காதலை பற்றி சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். இளைஞர்களுக்கு முன்னுரிமை. (போய் பொழப்ப பாருங்க தம்பி!!!). நல்ல கருத்துகள் பதிவாக்கப்படும்.(ஹ ஹ ஹா!)          

நன்றி: கல்கியின் கட்டுரை கலியாணம்.  

1 comment:

தமிழ் said...

முதலிரண்டு வரிகளைப் படித்தவுடன் அதிர்ச்சி!
கடைசி இரண்டு வரிகளைப் படித்தவுடன் பேரதிர்ச்சி!!